பதிவு செய்த நாள்
06 ஆக2016
02:07
புதுடில்லி:இந்தியாவின் மிகப்பெரிய உருக்கு நிறுவனமான, செயில் என அழைக்கப்படும், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனம், தன் ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.செயில் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில், 1,038 பேர்கள், விருப்ப ஓய்வு பெறுகின்றனர். இதனால், 213 கோடி ரூபாய் அளவுக்கு நிதியில் பாதிப்பு ஏற்படும். உற்பத்தியை அதிகரிப்பது, நிர்வாக சீர்திருத்தம் போன்ற காரணங்களை முன்னிட்டு, விருப்ப ஓய்வு திட்டத்தை, கடந்த மே 1ம் தேதி முதல், ஜூன் 30 தேதி வரை அறிவித்தது செயில்.
இதையடுத்து, விண்ணப்பித்தவர்களில், 1,038 பேர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கான இழப்பீட்டு தொகை, 213 கோடி ரூபாய் என, நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் நாடெங்கிலும் இருக்கும், 10 ஆலைகளில், 86,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். உருக்கு இறக்குமதி பிரச்னைகளால், நிறுவனத்தின் லாபம் குறைந்து வருகிற நிலையில், அதை குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது, செயில் நிறுவனம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|