பதிவு செய்த நாள்
06 ஆக2016
02:08
புதுடில்லி:மத்திய சுரங்கத் துறை அமைச்சர் பியுஷ் கோயல், லோக்சபாவில் கூறியதாவது:இந்திய புவியியல் ஆய்வு மையம், 2012 – 15 வரையிலான மூன்று நிதியாண்டுகளில், நாட்டில் உள்ள தங்கம் வளம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. ராஜஸ்தான், பீஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, மஹாராஷ்டிரா, உ.பி., மத்திய பிரதேசம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 98 லட்சம் டன் தங்கம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தங்கம் வளம் அதிகமாக உள்ள மாநிலங்களில், ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது; இங்கு, 68 லட்சம் டன் தங்கம் உள்ளது. அடுத்து, ஜார்க்கண்டில், 20 லட்சம் டன்; கர்நாடகாவில், 10 லட்சம் டன் தங்கம் உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தில், அலுமினியம் தயாரிப்பதற்கான பாக்சைட் வளம் உள்ளது. இங்கு, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைத்த பின், எம்.இ.சி.எல்., நிறுவனம், பாக்சைட் வெட்டியெடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|