பதிவு செய்த நாள்
07 ஆக2016
01:39
புதுடில்லி:எம்.டி.என்.எல்., நிறுவனத்தின் வருவாயில், 70 சதவீதம் சம்பளத்துக்காகவும், ஓய்வூதியத்துக்காகவும் செலவாகி விடுவதாக, தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.ராஜ்யசபாவில், அவர் பேசுகையில், எம்.டி.என்.எல்., நிறுவனத்தின் வருவாயில், 70 சதவீதம் அதன் ஊழியர்களின் சம்பளத்துக்கும், ஓய்வூதியத்துக்கும் செலவாகி விடுவதாகவும், இது அந்த நிறுவனத்தின் நிதி நிலைமையை மிகவும் பாதிப்பதாகவும் தெரிவித்தார். அவர் மேலும் பேசும்போது, 2013ம் ஆண்டு ஜூன், 10ம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., நிறுவன ஊழியர்களின் ஓய்வூதிய திருத்தத்தை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். இதனால் பலனடையும் ஊழியர்களின் எண்ணிக்கை, 1.18 லட்சம் என்றும், இதற்காக தோராயமாக, 129.63 கோடி ரூபாய், ஆண்டு ஒன்றுக்கு செலவாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|