பதிவு செய்த நாள்
07 ஆக2016
04:19
சிங்கப்பூர்:‘இந்திய மக்கள் தொகையில், இளையோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணை நிற்கிறது’ என, சிங்கப்பூரைச் சேர்ந்த டி.பி.எஸ்., வங்கி தெரிவித்துள்ளது. இவ்வங்கியின் ஆய்வுக் குழு, ஆசிய நாடுகளின் பொருளாதார சூழல், வளர்ச்சி, வர்த்தகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில், இளம் வயதினர் அதிக அளவில் உள்ளனர். இதர ஆசிய நாடுகளை ஒப்பிடும் போது, இந்த மூன்று நாடுகளில், உழைக்கும் வர்க்கத்தினரின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இதன் காரணமாக, அந்நாடுகளின் வளர்ச்சிக்கு, இளையோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நாடுகள், இளைய சமுதாத்தினரால், வரும் ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. இந்தியாவிற்கு இருக்கும் ஆற்றலுடன் ஒப்பிடும்போது, அதன் பொருளாதார வளர்ச்சி மிகக் குறைவாகவே உள்ளது. இந்தியாவில், உழைக்கும் இளைய சமுதாயத்தினர் அதிகரித்து வருகின்றனர்.
இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில், 7.8 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ள, மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2017 – 18ல், 7.9 சதவீதமாக அதிகரிக்கும். இதர ஆசிய நாடுகள், உற்பத்தியில் ஆதாயம் அடைந்து வருகின்றன. இந்தியாவில், சரக்கு மற்றும் சேவை சட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில், குறுகிய காலத்திற்கு, பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறை தாக்கம் இருக்கும். எனினும், 2019 – 20ல், இந்திய பொருளாதாரம், 8 சதவீத வளர்ச்சியை தாண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|