பதிவு செய்த நாள்
08 ஆக2016
07:22
டோக்கியோ : டொயோட்டா நிறுவனம் ஆரம்பித்து, 50 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, புதிய மாடல் காரை அறிமுகம் செய்கிறது அந்நிறுவனம்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த டொயோட்டா மோட்டார் கார்ப்பரேசன் நிறுவனம், 50வது ஆண்டு நிறைவை ஒட்டி, ‘கொரோலா ஆக்ஸியோ ஹைபிரிட் ஜி 50 லிமிட்டட்’ மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு சிறப்பு பதிவு காராக வெளியிடப்படுகிறது. கடந்த சில நாட்களாக கண்காட்சியில் வைக்கப்பட்ட இந்த கார், செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து விற்பனைக்கு வருகிறது.
தற்போதைய கொரோலா ஆக்ஸியோ மாடலை அடிப்படையாக கொண்டு, 500 கார்களை மட்டும் சிறப்பு பதிப்பாக தயாரித்து விற்பனை செய்ய இருக்கிறது. இந்த சிறப்பு பதிப்பு கார்கள் ஜப்பானில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை தோராயமாக 15 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய். கொரோலோ முதல் மாடல் கார் அறிமுகம் ஆனதிலிருந்து இதுவரை, 4 கோடியே 36 ஆயிரம் கார்கள், உலகெங்கிலும் விற்பனை ஆகியிருக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|