பதிவு செய்த நாள்
09 ஆக2016
05:13
மும்பை : இந்திய முன்னணி நிறுவனங்களில், சி.இ.ஓ., எனப்படும் தலைமை செயல் அதிகாரிகளின், ஓராண்டிற்கான சராசரி ஊதியம், 20 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது.
மும்பை பங்குச்சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீட்டின் கீழ் உள்ள, 24 தனியார் நிறுவனங்களில், 20 நிறுவனங்கள், 2015 – 16ம் நிதியாண்டில், சி.இ.ஓ.,க்களுக்கு அளித்த ஊதியத்தை வெளியிட்டுள்ளன. அதில், தலைமை செயல் அதிகாரியின் ஊதியம், ஊக்கத் தொகை, பங்கு ஒதுக்கீடு மற்றும் இதர சலுகைகளுடன், ஓராண்டில், சராசரியாக, 19 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், 10 கோடி ரூபாயாக இருந்தது. அதேநேரத்தில், பொதுத்துறை நிறுவனங்களின் சி.இ.ஓ., ஆண்டுக்கு சராசரியாக, 25 – 30 லட்சம் ரூபாய் ஊதியம் பெறுகிறார். கடந்த நிதியாண்டில், பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, 31.10 லட்சம் ஊதியம் பெற்றுள்ளார்.
நிறுவனம் சி.இ.ஓ.,/தலைவர் ஊதியம்(ரூ.கோடியில்)லார்சன் டூப்ரோ ஏ.எம்.நாயக் 66.14இன்போசிஸ் விசால் ஷிக்கா 48.73லுாபின்ஸ் தேஷ் பந்து 44.80எச்.டி.எப்.சி., வங்கி ஆதித்ய புரி 9.70ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி சந்தாகோச்சார் 6.60 ஆக்சிஸ் வங்கி சிகா சர்மா 5.50
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|