பதிவு செய்த நாள்
10 ஆக2016
06:34
சென்னை : யமஹா நிறுவனம், இருசக்கர வாகனங்களுக்கான தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி பள்ளியை, திருக்கழுக்குன்றத்தில் துவக்கி உள்ளது.
மோட்டார் சைக்கிள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள இந்திய யமஹா மோட்டார் நிறுவனத்திற்கு, சென்னையில், வாகன தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்நிறுவனம், சி.எஸ்.ஆர்., எனும் சமூக பொறுப்பு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் வகையில், அரசு அல்லது, தனியார் தொழில் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து, யமஹா பயிற்சி பள்ளிகளை துவக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் உட்பட, நாடு முழுவதும், 25 இடங்களில், யமஹா பயிற்சி பள்ளிகளை அந்நிறுவனம் அமைத்துள்ளது. இந்த பள்ளியில், இளைஞர்களுக்கு, இருசக்கர வாகனங்களின் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|