பதிவு செய்த நாள்
11 ஆக2016
07:08
புதுடில்லி : டாடா கெமிக்கல்ஸ், தன், யூரியா வணிக பிரிவை, ‘யாரா’ என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்ய உள்ளது.
டாடா கெமிக்கல்ஸ், உர வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு, உ.பி., மாநிலம், பாப்ராலா என்ற இடத்தில், உரம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த நிலையில், டாடா கெமிக்கல்ஸ், தன் யூரியா வணிக பிரிவை, 2,670 கோடி ரூபாய் மதிப்பிற்கு, யாரா பெர்டிலைசர்ஸ் என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து, டாடா கெமிக்கல்ஸ் நிறுவன அதிகாரி கூறியதாவது: எங்கள் நிறுவனத்தின், நிர்வாக குழு கூட்டத்தின் பரிந்துரைகளை ஏற்று, உ.பி., மாநிலம், பாப்ராலா என்ற இடத்தில் உள்ள உர தொழிற்சாலையை, யாரா பெர்டிலைசர்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு, 2,670 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|