பதிவு செய்த நாள்
11 ஆக2016
13:42
சென்னை: ''சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வணிகம், நடப்பு நிதியாண்டு, முதல் காலாண்டில், 49 ஆயிரத்து, 152 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது,'' என, அந்த வங்கியின் நிர்வாக இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான என்.காமகோடி தெரிவித்தார்.
இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி: நடப்பு நிதியாண்டில், சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த, முதல் காலாண்டில், சிட்டி யூனியன் வங்கி திரட்டிய டிபாசிட், 27 ஆயிரத்து, 936 கோடி ரூபாயாகவும்; வழங்கிய கடன்கள், 21 ஆயிரத்து, 216 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதன்படி, முதல் காலாண்டில், வங்கியின் மொத்த வணிகம், 49 ஆயிரத்து, 152 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதே காலத்தில், வங்கியின் மொத்த லாபம், 20 சதவீதம் உயர்ந்து, 236 கோடி ரூபாயாகவும்;
நிகர லாபம், 11 சதவீதம் அதிகரித்து, 124 கோடி ரூபாயாகவும் அதிகரித்து உள்ளது. வங்கிக்கு, நாடு முழுவதும், 525 கிளைகள்; 1,334 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. தற்போது, 300 ஏ.டி.எம்., மையங்களில், 'கார்டு' இல்லாமல், பணம் எடுக்கும் வசதி துவக்கப்பட்டு உள்ளது. இந்த சேவை, விரைவில், அனைத்து ஏ.டி.எம்.,களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|