பதிவு செய்த நாள்
16 ஆக2016
05:05
புதுடில்லி : வங்கிகள், கடைகள், திரையரங்குகள் உள்ளிட்டவை, 24 மணி நேரமும் இயங்க வகை செய்யும், மாதிரி சட்டத்திற்கு, சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இச்சட்டம் குறித்து, 12,788 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கடைகள், திரையரங்குகள், சேவை நிறுவனங்கள் ஆகியவை, 24 மணி நேரமும் செயல்படுவதற்கு ஏற்ப, நாட்டில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என, 73 சதவீதம் பேர் தெரிவித்தனர். எனினும், இரவிலும் கடைகளில் வியாபாரம் மேற்கொள்ள வாய்ப்பளிக்கும் இத்திட்டத்திற்கு, 50 சதவீதம் பேர், ஆதரவும், 49 சதவீதம் பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். 1 சதவீதம் பேர், பதில் அளிக்க மறுத்து விட்டனர்.இந்த, மாதிரி சட்டத்தை ஏற்பதும், ஏற்காததும், மாநில அரசுகளின் விருப்பம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|