பதிவு செய்த நாள்
16 ஆக2016
05:07
புதுடில்லி : நுகர்வோர் மின்னணு மற்றும் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் (சீமா) தலைவர் மணிஷ் சர்மா கூறியதாவது:மின்னணு சாதனங்களில், மொபைல் போன்களின் பங்களிப்பு, 25 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், மின்னணு சாதனங்கள் தொடர்பான அரசின் கொள்கைகள் நிலையற்றதாக உள்ளன. மின்னணு சாதனங்கள் தயாரிப்பு துறையில், ஒரே சீரான செயல்திட்டங்களுக்கு வழி இல்லாமல் உள்ளது. குறிப்பாக, அன்னிய நிறுவனங்கள் உள்நாட்டு மொபைல் போன் உதிரிபாகங்களை பயன்படுத்துவதில் தெளிவற்ற நிலை காணப்படுகிறது. அதுபோல, வரி விதிப்பு முறையிலும் குழப்பம் நீடிக்கிறது. சட்டங்களும், விதிமுறைகளும் அடிக்கடி மாற்றப்படுகின்றன. இது போன்ற குறைகளை, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணும் நோக்கில், சீமா உறுப்பு நிறுவனங்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, மின்னணு சாதன துறைகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|