பதிவு செய்த நாள்
16 ஆக2016
05:08
புதுடில்லி : ‘‘பணவீக்கத்தை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எடுத்த நடவடிக்கைகளை, அவர் பதவி விலகிய பிறகும் தொடர வேண்டும்,’’ என, ‘மூடிஸ்’ இன்வெஸ்டர் சர்வீஸ் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் மேரி திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: மூடிஸ் நிறுவனம், இந்தியாவின் கடன் தகுதியை, சாதகமான, ‘பா –3’ பிரிவின் கீழ் சேர்த்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டின் பணவீக்க அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு, அதிக நம்பகத் தன்மையுடன் கையாளப்பட்ட ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையும் ஒரு காரணம். இதனால், நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் வந்தது. அதுபோன்ற கொள்கைகளையும், செயல்பாடுகளையும் ரிசர்வ் வங்கி தொடர வேண்டும்.
கடந்த காலங்களில், நாட்டின் பணவீக்கம் மிகவும் உயர்ந்து இருந்தது. அதனால், நாட்டின் வளர்ச்சி குறைந்தது. முதலீட்டு திட்டங்கள் பாதிக்கப்பட்டன. பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வலுவான நிதிக் கொள்கை தேவை. குறிப்பாக, இந்தியா போன்ற நாட்டிற்கு, அது மிகவும் அவசியம்.
வரும், செப்., 4ல், ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பில் இருந்து ரகுராம் ராஜன் விலகிய பிறகும், அவர் காட்டிய வழியில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை அமைய வேண்டும். இந்தியா போன்ற ஒரு நாட்டின் கடன் தகுதி மதிப்பீடு, அதன் நம்பகத்தன்மையுள்ள நிதிக் கொள்கையிலும், அதன் செயலாக்கத்திலும் தான் உள்ளது. அவ்வாறு இல்லாத பட்சத்தில், அது, ஒரு நாட்டின் கடன் தகுதி மதிப்பீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|