மின்­னணு சாதன நிறு­வ­னங்கள் குறை­தீர்ப்பு குழு அமைப்புமின்­னணு சாதன நிறு­வ­னங்கள் குறை­தீர்ப்பு குழு அமைப்பு ... பல­த­ரப்­பட்ட பொருட்கள் ஏற்­று­ம­தியில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு அதி­க­ரிப்பு பல­த­ரப்­பட்ட பொருட்கள் ஏற்­று­ம­தியில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு ... ...
ரகுராம் ராஜன் வழியை பின்­பற்ற வேண்டும்: ‘மூடிஸ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2016
05:08

புது­டில்லி : ‘‘பண­வீக்­கத்தை கட்­டுப்­ப­டுத்த, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எடுத்த நட­வ­டிக்­கை­களை, அவர் பதவி வில­கிய பிறகும் தொடர வேண்டும்,’’ என, ‘மூடிஸ்’ இன்­வெஸ்டர் சர்வீஸ் நிறு­வ­னத்தின் மூத்த துணை தலைவர் மேரி திரன் தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் கூறி­ய­தா­வது: மூடிஸ் நிறு­வனம், இந்­தி­யாவின் கடன் தகு­தியை, சாத­க­மான, ‘பா –3’ பிரிவின் கீழ் சேர்த்­துள்­ளது. கடந்த இரண்டு ஆண்­டு­களில், நாட்டின் பண­வீக்க அளவு வெகு­வாக குறைந்­துள்­ளது. இதற்கு, அதிக நம்­பகத் தன்­மை­யுடன் கையா­ளப்­பட்ட ரிசர்வ் வங்­கியின் நிதிக் கொள்­கையும் ஒரு காரணம். இதனால், நாட்டின் பண­வீக்கம் கட்­டுக்குள் வந்­தது. அது­போன்ற கொள்­கை­க­ளையும், செயல்­பா­டு­க­ளையும் ரிசர்வ் வங்கி தொடர வேண்டும்.
கடந்த காலங்­களில், நாட்டின் பண­வீக்கம் மிகவும் உயர்ந்து இருந்­தது. அதனால், நாட்டின் வளர்ச்சி குறைந்­தது. முத­லீட்டு திட்­டங்கள் பாதிக்­கப்­பட்­டன. பண­வீக்­கத்தை கட்­டுப்­ப­டுத்த, வலு­வான நிதிக் கொள்கை தேவை. குறிப்­பாக, இந்­தியா போன்ற நாட்­டிற்கு, அது மிகவும் அவ­சியம்.
வரும், செப்., 4ல், ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பில் இருந்து ரகுராம் ராஜன் வில­கிய பிறகும், அவர் காட்­டிய வழியில், ரிசர்வ் வங்­கியின் நிதிக் கொள்கை அமைய வேண்டும். இந்­தியா போன்ற ஒரு நாட்டின் கடன் தகுதி மதிப்­பீடு, அதன் நம்­ப­கத்­தன்­மை­யுள்ள நிதிக் கொள்­கை­யிலும், அதன் செய­லாக்­கத்­திலும் தான் உள்­ளது. அவ்­வாறு இல்­லாத பட்­சத்தில், அது, ஒரு நாட்டின் கடன் தகுதி மதிப்­பீட்டில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)