பதிவு செய்த நாள்
17 ஆக2016
00:52
புதுடில்லி : மகிந்திரா நிறுவனம், புதிய வகை வர்த்தக வாகன தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்து உள்ளது.மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், அதிக திறன் உடைய, புதிய வகை வர்த்தக வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் டிரக் மற்றும் பஸ் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மகிந்திரா நிறுவனம், புதிய வாகனங்களை அறிமுகம் செய்யவும், அந்த வாகனங்களை மேம்படுத்தும் பணிக்கும், 700 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. விரைவில், அதிக திறன் கொண்ட, புதிய வகை வர்த்தக வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளோம். இதன் மூலம், நடுத்தர மற்றும் அதிக எடை உடைய வர்த்தக வாகன சந்தையில், எங்கள் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு அதிகளவில் உயரும். ஆப்ரிக்க நாடுகளுக்கு, அதிக எடை உடைய டிரக்குகள், அடுத்த இரண்டு – மூன்று ஆண்டுகளில் ஏற்றுமதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|