பதிவு செய்த நாள்
17 ஆக2016
00:53
புதுடில்லி : ஹிமாலயா நிறுவனம், உடல் ஆரோக்கிய மூலிகை பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பிரபல நிறுவனமாகும். இந்த நிறுவனம், 2007ம் ஆண்டில், குழந்தைகள் பராமரிப்பு பொருட்கள் சந்தையிலும் இறங்கியது. தற்போது, அந்த பிரிவை சேர்ந்த பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதன் மூலம், 2020ம் ஆண்டில், 100 கோடி டாலர் விற்றுமுதலை ஈட்ட, இந்த நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில், குழந்தைகள் பராமரிப்பு பொருட்களின் சந்தை மதிப்பு, 2019ம் ஆண்டில், 1,800 கோடி ரூபாயாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆரோக்கிய பராமரிப்பு துறையின் சந்தை மதிப்பு, 14 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அந்த இரண்டு துறைகளிலும், அதிக கவனம் செலுத்தி, 2020ல், 100 கோடி டாலர் விற்றுமுதல் ஈட்ட திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|