பதிவு செய்த நாள்
17 ஆக2016
00:54
மும்பை : நாக்பூர் நகரை, ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்றும் பணிக்கான ஒப்பந்தம், எல் அண்டு டி நிறுவனத்திற்கு கிடைத்து உள்ளது. மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில், அடிப்படை கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம் என, பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி, ‘ஸ்மார்ட் சிட்டி’களாக அவற்றை உருவாக்க முடிவு செய்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள, ‘ஸ்மார்ட் சிட்டி’ நகரங்களின் பட்டியலில், மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள, நாக்பூரும் இடம்பெற்று உள்ளது. நாக்பூரை, ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்றும் ஒப்பந்த பணி, எல் அண்டு டி நிறுவனத்திற்கு கிடைத்து உள்ளது. இதையடுத்து, நாக்பூரில், 1,200 கி.மீ., நீளத்திற்கு, ‘ஆப்டிகல் பைபர் கேபிள்’ பதித்தல்; நகரின் முக்கிய இடங்களில், ‘வை – பை’ வசதி ஏற்படுத்துதல்; 3,800 கண்காணிப்பு கேமரா பொருத்துதல்; ஸ்மார்ட் லைட்டிங் அமைத்தல்; நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மை முறைகளை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை, எல் அண்டு டி நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|