பதிவு செய்த நாள்
17 ஆக2016
00:54
புதுடில்லி : இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான, ‘அசோசெம்’ வெளியிட்டுள்ள அறிக்கை:ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறை, 2015 – 16ம் நிதியாண்டில், இந்திய அளவில், 2.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை திரட்டியது. அதில், 25 சதவீத முதலீடுகளை கர்நாடகா பெற்றுள்ளது. கர்நாடகாவில், ‘ரோபோ, செமி கண்டக்டர், சிப் டிசைன், நானோ தொழில்நுட்பம்’ உள்ளிட்ட, நவீன துறை சார்ந்த ஐ.டி., நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. அதனால், அம்மாநிலம் அதிகளவில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. கடந்த, 2005 முதல், கர்நாடகாவின் தகவல் தொழில்நுட்பத் துறை, ஆண்டுக்கு சராசரியாக, 14 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. எனினும், தேசிய அளவிலான, 17 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது, அது குறைவுதான். ஐ.டி.,துறை முதலீடுகளை ஈர்ப்பதில், குஜராத் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்த மூன்று இடங்களை, கேரளா, ஆந்திரா, தமிழகம் ஆகியவை பிடித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|