பதிவு செய்த நாள்
17 ஆக2016
00:55
புதுடில்லி : ஓய்வூதிய நிதியம் ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் ஹேமன்த் கான்ட்ராக்டர் கூறியதாவது: ஐந்து ஆண்டுகளுக்கு முன், தேசிய ஓய்வூதிய திட்டம் துவங்கப்பட்டது. அப்போது, அதற்கு வரவேற்பு இல்லை. ஆனால், கடந்த ஓராண்டில், சந்தாதாரர் எண்ணிக்கை, 100 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைகளே காரணம். தேசிய ஓய்வூதிய திட்டத்தில், முதலீடுகளின் முதிர்ச்சி காலத்தில், 40 சதவீதம் வரை வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இதனால், ஏராளமான தனிநபர்கள், ஓய்வூதிய திட்டத்தில் ஆர்வமுடன் இணைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் மொத்த சந்தாதாரர்களில், அரசு ஊழியர்களின் பங்களிப்பு, 40 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இருந்தபோதிலும், நிர்வகிக்கப்படும் ஓய்வூதிய சொத்தில், அவர்களின் பங்கு, 87 சதவீதமாக உள்ளது. தேசிய ஓய்வூதிய நிதியம், 1.38 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|