பதிவு செய்த நாள்
18 ஆக2016
07:03
புதுடில்லி : மத்திய அரசு, வரும், 2017, ஏப்ரல் 1 முதல், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
பார்லி.,யில், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஜி.எஸ்.டி., மசோதாவுக்கு, குறைந்தபட்சம், 16 மாநிலங்களின் சட்டசபைகள் ஆதரவளிக்க வேண்டும். அசாம், பீஹார் ஆகியவை, ஜி.எஸ்.டி.,க்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இந்நிலையில், ஜி.எஸ்.டி., தொடர்பான அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க, மாநில நிதியமைச்சர்கள் குழு கலந்தாய்வு கூட்டத்திற்கு, நிதியமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
டில்லியில், வரும், 30ம் தேதி இக்கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, ஜி.எஸ்.டி., குறித்த பல்வேறு பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதனிடையே, ஜி.எஸ்.டி., குறித்து, மத்திய அரசு துறை அதிகாரிகள், தொழில் கூட்டமைப்புகள், வர்த்தக பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|