பதிவு செய்த நாள்
18 ஆக2016
07:04
கோவை : கோவையில், நாளை நடக்க உள்ள பருத்தி மாநாட்டில், முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்தியாவில், சில மாதங்களுக்கு முன் பருத்தி விலை உயர்ந்ததால், ஜவுளித் துறையில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் கோவையில்,‘இந்தியன் காட்டன் சினாரியோ’ என்ற பெயரில் நாளை, பருத்தி மாநாடு நடக்கிறது. இரண்டு நாட்கள் நடக்கும் பருத்தி மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த, 400 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில், கடந்த ஏப்., முதல் ஜூன் வரையிலான காலத்தில், பருத்தி விலை ஏற்ற, இறக்கம்; அதனால் ஜவுளித் துறைக்கு ஏற்பட்ட நெருக்கடி; நிதி தேவை உள்ளிட்டவை குறித்து, பருத்தி தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் ஆலோசிக்க உள்ளனர். மேலும் பருத்தி சாகுபடி பரப்பை அதிகரித்தல்; பருத்திக்கான தேவை, அளிப்பு; புதிய தொழில்நுட்பம் போன்றவை தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|