பதிவு செய்த நாள்
18 ஆக2016
07:05
புதுடில்லி : டெலாய்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய பொருளாதாரம் எப்படி இருக்கும் என, ஆண்டுக்கு, 500 கோடி முதல், 2,500 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும் நிறுவனங்களின், தலைமை நிதி அதிகாரிகள், 300 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், நடுத்தர கால அளவில், நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என, 90 சதவீதத்தினரும், நீண்ட கால அடிப்படையில், பொருளாதார வளர்ச்சி நன்கு இருக்கும் என, 94 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர். இந்தியாவில் தொழில் துவங்குவது ஓரளவு சுலபமாகியுள்ளதாக, 60 சதவீதத்தினரும், எந்தவித மாற்றமும் இல்லை என, 35 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர். கடந்த ஓராண்டாக, முதலீடுகளுக்கான சூழல் மேம்பட்டுள்ளதாக, 60 சதவீதம் பேர் கூறியுள்ளனர். சர்வதேச பொருளாதார மந்தநிலையிலும், இந்தியா பாதிக்கப்படாமல் உள்ளதற்கு, சீர்திருத்த திட்டங்களும், கூர்மையான நிதிக் கொள்கைகளும் காரணம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|