பதிவு செய்த நாள்
18 ஆக2016
07:06
லக்னோ : சீனாவை சேர்ந்த லிபோன் நிறுவனம், உ.பி., மாநிலத்தில் உள்ள நொய்டாவில், மொபைல் போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
லிபோன் நிறுவனம், இந்தியாவில் வேறொரு நிறுவனம் மூலமாக, போன்களை தயாரித்து வருகிறது. இத்தொழிற்சாலை நாள் ஒன்றுக்கு, 20 ஆயிரம் போன்கள் தயாரிக்கும் திறன் கொண்டதாகும். தற்போது லிபோன் நிறுவனம், இந்தியாவில் சொந்தமாக தொழிற்சாலையை நிறுவ இருக்கிறது.
இதுகுறித்து, லிபோன் நிறுவன துணை தலைவர் அமித் சக்சேனா கூறியதாவது: இந்தியாவில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் குறைந்த விலையில், சிறந்த வசதிகள் கொண்ட போன்களை விற்பனை செய்ய இருக்கிறோம். எங்கள் நிறுவனம், நடப்பாண்டில், 80 கோடி ரூபாயும்; 2018ம் நிதி ஆண்டில், 150 கோடி ரூபாயும் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், டாப் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக லிபோன் அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|