பதிவு செய்த நாள்
18 ஆக2016
12:46
சென்னை : மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 2ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் கூறுகையில், சீர்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர்களின் உரிமைகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. மத்திய அரசின் தொழிலாளர் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. தேசிய அளவில் இந்த போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். தேசிய வர்த்தக சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.
பொதுப்பணித்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகளின் தொழிலாளர்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|