பதிவு செய்த நாள்
18 ஆக2016
13:52
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து, அரபு நாடுகளுக்கு அரிய வகை டியூப் கணவாய் மீன்கள் ஏற்றுமதியாகிறது. பாம்பனில் இருந்து நேற்றுமுன்தினம் 40 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். சில படகுகளில் 2 டன் வரை டியூப் கணவாய் மீன்கள் சிக்கின. ஒரு அடி நீளமுள்ள இம்மீன் உருளை வடிவில் உள்ளதால் 'டியூப்' கணவாய் என்றும், 'ஊசி' கணவாய் என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர். கடலில் மணிக்கு 70 கி.மீ.,வேகத்தில் நீந்தும் இக்கணவாய், எதிரிகளிடம் இருந்து தப்பிக்க 'கருப்பு நிற' திரவத்தை பீய்ச்சி விட்டு தப்பி செல்லும் ஆற்றல் படைத்தது.அதிக ருசிகொண்ட இம்மீனுக்கு கிலோ ரூ.120 என விலை நிர்ணயம் செய்து பாம்பன் மீன் வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். இவற்றை சுத்தம் செய்து பதப்படுத்திய பின் ஐஸ் பெட்டியில் அடைத்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|