பதிவு செய்த நாள்
18 ஆக2016
14:44
தண்ணீர் பற்றாக்குறையில், சாகுபடி பாதிக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும், 2.5 லட்சம் டன் உரங்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், வேளாண் துறையினர் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், ஜூனில் குறுவை போக நெல் சாகுபடி நடக்கும். விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில், குறுவை நெல் சாகுபடியுடன் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியும் நடக்கும். தண்ணீர் பற்றாக்குறையால், டெல்டா மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில் மேற்படி சாகுபடி பெரிய அளவில் நடக்கவில்லை. இதனால், மாநிலம் முழுவதும் தனியார் மற்றும் கூட்டுறவு அமைப்புகளில், 2.5 லட்சம் டன் உரங்கள் தேங்கி உள்ளன.● யூரியா உரம், 1 லட்சம் டன் வரை தேங்கி உள்ளது. அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில், 8,346 டன், திருச்சியில், 7,661 டன், வேலுாரில், 6,134 டன், நாகப்பட்டினத்தில், 6,085 டன் உரம் தேங்கி உள்ளது● டி.ஏ.பி., உரம், 40 ஆயிரம் டன் தேங்கி உள்ளது. அதிகபட்சமாக, தஞ்சாவூரில், 4,161, சேலத்தில், 3,399, திருவாரூரில், 3,004 டன்களும் தேங்கி உள்ளன● காம்ப்ளக்ஸ் எனப்படும் கூட்டு உரம், 58 ஆயிரத்து, 914 டன் அளவிற்கு தேங்கி உள்ளது. அதிகபட்சமாக, சேலத்தில், 4,844, கடலுார் 3,848, தஞ்சாவூரில், 3,218, திருவள்ளூரில், 3,604 டன்களும் தேங்கி உள்ளன ● எம்.ஓ.பி., உரம், 37 ஆயிரத்து, 252 டன், எஸ்.எஸ்.பி., உரம், 10 ஆயிரத்து, 608 டன்களும் தேங்கி உள்ளன. இவ்வாறு, மாநிலம் முழுவதும், 2.5 லட்சம் டன் அளவிற்கு உரம் தேக்கிக் கிடக்கிறது.சாகுபடி நடக்காமல் உரங்கள் அதிகம் தேங்குவதால், அரசின் உணவு தானிய உற்பத்தி இலக்கை எட்டுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை எப்படி சமாளிப்பது என தெரியாமல், வேளாண் துறை அதிகாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|