பதிவு செய்த நாள்
20 ஆக2016
00:57
புதுடில்லி:மத்திய சுற்றுலா துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியதாவது:இந்தியாவில், குறைந்த செலவில், தரமான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. அதனால், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நோயாளிகள், இந்தியாவிற்கு சிகிச்சை பெற வருகின்றனர். இத்தகைய மருத்துவ சுற்றுலா துறை, கடந்த மூன்று ஆண்டுகளில், 23 - 28 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மருத்துவ சுற்றுலா, இந்தியாவுக்கு மேலும் வலிமை சேர்க்கும் துறையாக மாறும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதையொட்டி, இத்துறையை ஊக்குவிக்க, மிகப்பெரிய அளவிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக, வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக வருவோருக்கு 'இ - மெடிக்கல் விசா' வழங்கும் திட்டம், விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இத்துறையை ஊக்குவிக்க, தேசிய மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா வாரியம் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாரியம், மருத்துவ சிகிச்சைக்கான விபரங்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|