பதிவு செய்த நாள்
22 ஆக2016
03:45
தேசிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ்., திட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச பங்கேற்பு தொகை, 1,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
என்.பி.எஸ்., திட்டத்தை மேலும் பிரபலமாக்கும் வகையில் பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வரிசையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.என்.பி.எஸ்., திட்டத்தில், டயர் 1 கணக்கின் கீழ், உறுப்பினர்கள் நிதி ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 6,000 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த தொகையை, 1,000 ரூபாயாக குறைத்துள்ளது. இது ஓய்வூதிய கணக்காகும். இதில் 60 வயது வரை பங்களிப்பு செலுத்த வேண்டும். இந்த தொகையை 3 வகையான நிதிகளில் முதலீடு செய்து கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. நிதியை நிர்வகிக்கும் பண்ட் மேனேஜர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
இதே போல டயர் 2 கணக்கிலும், முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேமிப்பு கணக்கு போல செயல்படும் இதில், ஆண்டுக்கு, குறைந்தபட்சம் 250 ரூபாய் செலுத்த வேண்டும். நிதி ஆண்டு இறுதியில் கணக்கில் குறைந்தபட்சம் 200 ரூபாய் இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இதே போல, குறைந்தபட்ச தொகை செலுத்த தவறியதற்காக மற்றும் குறைந்த பட்ச தொகையை வைத்திருக்க தவறியதற்காக முடக்கப்பட்ட கணக்குகள் அனைத்தையும் ஒருமுறை வாய்ப்பாக மீண்டும் இயக்கி கொள்ள அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கணக்கு முடக்கப்பட்ட உறுப்பினர்கள் அதை மீண்டும் இயக்கிக் கொள்ளலாம். இதற்காக அபராதம் செலுத்த வேண்டியதில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|