பதிவு செய்த நாள்
22 ஆக2016
03:58
புதுடில்லி : ‘வரும் மாதங்களில், தனியார் துறையின் முதலீடுகளும், விரிவாக்கத் திட்டங்களும் சூடு பிடிக்கும்’ என, டி.பி.எஸ்., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்:இந்தாண்டு, தனியார் துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் மந்தமாகவே உள்ளன; முதலீடுகள் மற்றும் விரிவாக்கத் திட்டங்களிலும், நிதானப் போக்கு காணப்படுகிறது.எனினும், தற்போது அரசு திட்டங்களில் முதலீடுகள் அதிகரித்துள்ளதாலும், அன்னிய நேரடி முதலீடுகள் பெருகி வருவதாலும், வரும் மாதங்களில், தனியார் துறையின் செயல்பாடுகளில் சுறுசுறுப்பு ஏற்படும். அடுத்த ஆண்டில், அதிக அளவில் தனியார் நிறுவனங்கள் முதலீடுகளையும், விரிவாக்கத் திட்டங்களையும் மேற்கொள்ளும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த, ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், செயல்பாட்டில் உள்ள திட்டங்களில், 12.3 சதவீத திட்டங்கள் முடங்கியுள்ளன. அவற்றில், பெரும்பான்மையானவை, தனியார் துறையின் பங்களிப்பை கொண்டவை என, சி.எம்.ஐ.இ., புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதே காலண்டில், தனியார் துறையின் புதிய முதலீடுகள் குறித்த அறிவிப்புகள், முந்தைய காலாண்டை விட, குறைந்துள்ளன. நுகர்வோரின் தேவை குறைந்துள்ளது; கடன் செலவும், திட்டச் செலவினங்களும் அதிகரித்து உள்ளன.
சர்வதேச பொருளாதார மந்தநிலையால், ஏற்றுமதிக்கான, ‘ஆர்டர்’களும் குறைந்துள்ளன. இதுபோன்ற சூழல் காரணமாக, தனியார் துறை நிறுவனங்கள், அவற்றின் முதலீடுகள் மற்றும் விரிவாக்கத் திட்டங்களை தள்ளி வைத்துள்ளன. இந்த நிலை, இந்தாண்டு இறுதிக்குள் மாறும். வரும் ஆண்டில், தனியார் துறையினர் செயல்பாடுகள் விறுவிறுப்பு அடையும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|