தனியார் முத­லீ­டுகள் சூடு பிடிக்கும்: டி.பி.எஸ்.,தனியார் முத­லீ­டுகள் சூடு பிடிக்கும்: டி.பி.எஸ்., ... ரூபாய் மதிப்பில் தொடர் சரிவு : ரூ.67.19 ரூபாய் மதிப்பில் தொடர் சரிவு : ரூ.67.19 ...
சட்­டங்­களில் திருத்தம்; ஜி.எஸ்.டி.,க்கு ஏற்ப மாற்­றப்­படும் சிறப்பு பொரு­ளா­தார மண்­டல சட்­டங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2016
03:59

புது­டில்லி : ‘‘அடுத்த ஆண்டு அறி­மு­க­மாக உள்ள, ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்றும் சேவை வரி திட்­டத்­திற்கு ஏற்ப, சிறப்பு பொரு­ளா­தார மண்­டலம் மற்றும் வெளி­நாட்டு வர்த்­தகம் சார்ந்த சட்­டங்­களில் திருத்தம் செய்­யப்­படும்,’’ என, மத்­திய வர்த்­தக துறை செயலர் ரீடா தியோ­தியா தெரி­வித்து உள்ளார்.
அவர், டில்­லியில், இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்பின், ‘சர்­வ­தேச வர்த்­தக விதி­மு­றை­களில் ஏற்­பட்டு வரும் மாற்றம்’ என்ற தலைப்­பி­லான கருத்­த­ரங்கில், மேலும் பேசி­ய­தா­வது: அடுத்த ஆண்டு, சரக்கு மற்றும் சேவை வரி அம­லுக்கு வரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதன் மூலம், நாடு முழு­வதும் ஒரே வரி என்ற நடை­முறை உரு­வாகும். அதனால், தற்­போது பல்­வேறு வரிச்­ச­லு­கை­களை அனு­ப­வித்து வரும், சிறப்பு பொரு­ளா­தார மண்­டல நிறு­வ­னங்­க­ளுக்­கான சட்­டத்தில், தேவை­யான திருத்­தங்கள் செய்­யப்­பட உள்­ளன. அது­போல, வெளி­நாட்டு வர்த்­தக சட்­டத்­திலும், உரிய திருத்­தங்கள் செய்­யப்­படும். அது­மட்­டு­மின்றி, வெளி­நாட்டு வர்த்­த­கத்­திற்­கான தலைமை இயக்­கு­ன­ரகம் செயல்­ப­டுத்தி வரும் திட்­டங்­க­ளிலும், சரக்கு மற்றும் சேவை வரி சட்­டத்­திற்கு ஏற்ப, மாற்­றங்கள் செய்­யப்­படும்.
இது தொடர்­பாக, வரைவு மசோ­தாவில் சேர்க்­கப்­பட வேண்­டிய அம்­சங்கள் குறித்து, மத்­திய அரசின் சட்ட வல்­லு­னர்கள் ஆராய்ந்து வரு­கின்­றனர். தற்­போது, சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­களில் உள்ள, நிறு­வ­னங்­க­ளுக்­கான வரி விதிப்பு முறைகள் தொடரும். அது­போல, வெளி­நாட்டு வர்த்­தக சட்­டத்தின் கீழ் உள்ள நடை­மு­றை­களும் நீடிக்கும். சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் சார்ந்த பணிகள் முடி­வ­டையும் வரை, தற்­போ­தைய நடை­மு­றை­களில், உட­ன­டி­யாக எந்த மாற்­றமும் செய்­யப்­பட மாட்­டாது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு அம­லுக்கு வந்தால், அனைத்து அம்­சங்­க­ளிலும் தெளி­வான பார்வை கிடைக்கும். தற்­போது, வெளி­நாட்டு வர்த்­தக தலைமை இயக்­கு­ன­ர­கத்தின் ஒரு சில திட்­டங்கள், இறக்­கு­ம­திக்கு செலுத்தும் வரியை, ஏற்­று­மதி நிறு­வ­னங்கள் திரும்ப பெற வகை செய்­கின்­றன.
இதை, சரக்கு மற்றும் சேவை வரி சட்­டத்­திற்கு ஏற்ப, மாற்­று­வது குறித்து ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­கி­றது. அனைத்து வரி சார்ந்த பிரச்­னை­க­ளுக்கும், சரக்கு மற்றும் சேவை வரி அம­லுக்கு வரு­கையில் தீர்வு கிடைக்கும். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, இந்­தி­யாவின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியை, 1 – 1.5 சத­வீதம் உயர்த்த உதவும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)