பதிவு செய்த நாள்
22 ஆக2016
13:39
சேலம்:வட மாநிலங்களில் இருந்து, துவரம் பருப்பு வரத்து அதிகரித்துள்ளதால், ஒரே மாதத்தில் குவிண்டாலுக்கு, 2,000 ரூபாயும்; கிலோவுக்கு, 20 ரூபாயும் விலை சரிந்தது. இதனால், பதுக்கல் வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர்.தமிழகத்துக்கு தேவையான துவரம் பருப்பு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வருகிறது.அந்த மாநிலங்களில், தற்போது பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் இருப்பு வைத்திருந்த துவரையை விற்று வருவதால், தமிழகத்துக்கு பருப்பு வரத்து அதிகரித்துள்ளது.
ஜூலையில், வாரத்துக்கு, 100 லாரிகளில் வந்த துவரம் பருப்பு, ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில், 200 லாரிகளாக உயர்ந்தது.ஆக., 15ம் தேதி பருப்பின் விலை, குவின்டாலுக்கு, 1,000 ரூபாயும்; கிலோவுக்கு, 10 ரூபாயும் சரிந்தது. ஆகஸ்ட் மூன்றாவது வாரம், 300 லாரிகளில் துவரம் பருப்பு வந்ததால், 20ம் தேதி குவின்டாலுக்கு, மேலும், 1,000 ரூபாய் விலைசரிந்தது. ஆகஸ்டில் மட்டும் குவின்டாலுக்கு, 2,000 ரூபாயும்; கிலோவுக்கு, 20 ரூபாயும் சரிந்துள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் துவரை சீசன், அக்டோபர் இறுதியில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், விலை மேலும் குறையும் என்பதால், துவரம் பருப்பை பதுக்கி வைத்துள்ள வியாபாரிகள், பீதி அடைந்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|