பதிவு செய்த நாள்
22 ஆக2016
16:16
மும்பை : தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் சரிவுடன் நிறைவடைந்துள்ளன. கடந்த வார இறுதியில் சரிவுடன் முடிவடைந்த பங்குச்சந்தைகள், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் நியமனத்திற்கு பிறகு சரிவிலிருந்து மீளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய கவர்னர் நியமன உத்தரவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்ததால் இன்று பங்குச்சந்தைகள் சரிவுடனேயே துவங்கின.
ஆட்டோ, மின்துறை மற்றும் ஐடி துறை பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக இன்று நாள் முழுவதும் பங்குச்சந்தைகள் சரிவுடனேயே காணப்பட்டன. வர்த்தக நேர முடிவு சென்செக்ஸ் 91.46 புள்ளிகள் சரிந்து 27,985.54 புள்ளிகளாகவும், நிப்டி 37.75 புள்ளிகள் சரிந்து 8629.15 புள்ளிகளாகவும் இருந்தன. நீண்ட நாட்களுக்கு பிறகு, இன்றைய பகல் நேர வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 28,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|