பதிவு செய்த நாள்
23 ஆக2016
04:48
புதுடில்லி : தாவர எண்ணெய் இறக்குமதி, 1.50 கோடி டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறைவாக உள்ளதால், தாவர எண்ணெய், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில், நவம்பர் முதல் அக்டோபர் வரை, எண்ணெய் சந்தைப்படுத்தும் பருவமாகும். கடந்த, 2014 – 15ம் ஆண்டு, எண்ணெய் சந்தைப்படுத்தும் பருவத்தில் இந்தியா, 1.46 கோடி டன் தாவர எண்ணெய் இறக்குமதி செய்தது. நடப்பு பருவத்தில், தாவர எண்ணெய் இறக்குமதி, 1.50 கோடி டன்னாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், தாவர எண்ணெய் தேவை, இரண்டு கோடி டன்னாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இதில் இறக்குமதி, 1.50 கோடி டன்னாக இருக்கும். தற்போது, கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரி, 12.5 சதவீதம்; சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் மீதான வரி, 20 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|