பதிவு செய்த நாள்
23 ஆக2016
04:50
புதுடில்லி : ஜிவி மொபைல்ஸ் நிறுவனம், 200 கோடி ரூபாய் முதலீட்டில், புதிதாக தொழிற்சாலை ஒன்றை அமைக்க உள்ளது.
ஜிவி மொபைல் போன் நிறுவனத்திற்கு, தற்போது டில்லியில், மொபைல் போன், ‘அசெம்பிள்’ செய்யும் ஆலை உள்ளது. அங்கு மாதந்தோறும், 33.50 லட்சம் போன்கள் அசெம்பிள் செய்யப்படுகின்றன. இந்நிலையில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய தொழிற்சாலையை அமைக்க, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் ஆனந்த் கூறியதாவது: எங்கள் நிறுவனம், தீபாவளியை ஒட்டி மாதந்தோறும், ஆறு லட்சம் போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. தற்போது, லோனாவாலா என்ற இடத்தில், 180 கோடி ரூபாய் – 200 கோடி ரூபாய் முதலீட்டில், மொபைல் போன் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க உள்ளோம். இந்த ஆலையில், மாதந்தோறும், ஐந்து லட்சம் போன்கள் உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|