ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.12ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.12 ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு ...
பாமாயில் விலை ரூ.10 அதிகரிப்பு : எண்ணெய் விலை உயரும் அபாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2016
11:41

மலேஷியாவில் இருந்து அதிக அளவு பாமாயிலை, சீனா கொள்முதல் செய்வதால், தமிழகத்தில் பாமாயில், லிட்டருக்கு, 10 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், பிற எண்ணெய் வகைகளின் விலைகளும் உயரும் என, வியாபாரி கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சேலம் மாவட்ட தாவர எண்ணெய் விற்பனையாளர்கள் சங்க தலைவர் சந்திரகாசன் கூறியதாவது: இந்தியாவுக்கு தேவையான பாமாயில், 75 சதவீதம் மலேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது, மலேஷியாவில் இருந்து, அதிக அளவில் பாமாயிலை சீனா கொள்முதல் செய்து வருகிறது. மலேஷியாவில், பாமாயிலுக்கு ஏற்பட்டுள்ள செயற்கை தட்டுப்பாடு காரணமாக, அதன் விலை உயர்ந்து உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில், கடந்த வாரம் லிட்டர், 57 ரூபாய்க்கு விற்ற பாமாயில், 67 ரூபாயாக அதிகரித்துள்ளது.
15 லிட்டர் டின், 855 ரூபாய்க்கு விற்றது, 1,000 ரூபாயாக அதிகரித்து உள்ளது. சூரியகாந்தி எண்ணெய் விலையும், லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் விலையிலும் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு, 'ஆன்லைன்' வர்த்தகமும் காரணம். எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்ளை, ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நீக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பட்சணங்கள்...: விநாயகர் சதுர்த்தி, ஓணம், நவராத்திரி, தீபாவளி என, பண்டிகைகள் வரிசை கட்டும் நிலையில், எண்ணெய் விலைகளில் உயர்வு ஏற்பட்டுள்ளது, ஸ்வீட் ஸ்டால் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இனிப்பு, கார பட்சணங்கள், உணவுப் பண்டங்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)