பதிவு செய்த நாள்
24 ஆக2016
00:01
புதுடில்லி : சாம்சங் நிறுவனம், அதிக விலை உடைய தன் மொபைல் போன்களை, வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கி, புதுப்பித்து, குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.
தென்கொரிய நாட்டை சேர்ந்த சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், உலகில், ‘ஸ்மார்ட் போன்’ விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம், விலை உயர்ந்த மொபைல் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், அதிக விலை உள்ள தன் மொபைல் போனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து, ஓராண்டிற்கு பின் அதை மீண்டும் வாங்க உள்ளது. அந்த போனை, புதுப்பித்து மீண்டும் குறைந்த விலையில் விற்பனை செய்யவும் சாம்சங் திட்டமிட்டு உள்ளது. அடுத்த ஆண்டில், இந்த திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்க முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவில் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்தும் எண்ணத்திலும் இந்நிறுவனம் இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|