பதிவு செய்த நாள்
24 ஆக2016
00:02
மைசூரு : ஜே.கே., டயர், 100 கோடி ரூபாய் முதலீட்டில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஒன்றை அமைக்க முடிவு செய்து உள்ளது.
டயர் தயாரிப்பில், ஒரு கோடி டயர் தயாரித்த, இந்தியாவை சேர்ந்த முதல் நிறுவனமாக, ஜே.கே., டயர் திகழ்கிறது. இந்நிலையில், ஜே.கே., டயர் நிறுவனம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரகுபதி சிங்ஹானியா கூறியதாவது:எங்கள் நிறுவனத்திற்கு, பல இடங்களில் ஆய்வு மையங்கள் உள்ளன. அவற்றை ஒருங்கிணைத்து, 100 கோடி ரூபாய் முதலீட்டில், ஒரே இடத்தில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில், முதல் கட்டமாக, 200 பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வேலை வழங்கப்படும். இந்த எண்ணிக்கை, அடுத்த ஓராண்டில் இரட்டிப்பாக உயர்த்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|