பதிவு செய்த நாள்
24 ஆக2016
00:05
புதுடில்லி : பியூச்சர் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி கிஷோர் பியானி கூறியதாவது:கடந்த, 2014, நவ., 21ல், அக்டிஸ் கேப்பிட்டல் மற்றும் இதர நிறுவனர்களிடம் இருந்து, நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின், 98 சதவீத பங்குகளை, பியூச்சர் கன்ஸ்யூமர் எண்டர்பிரைசஸ் வாங்கியது. தற்போது, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட ஐந்து தென் மாநிலங்களில், 160 நீல்கிரிஸ் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம், ஆண்டுக்கு, 800 – 900 கோடி ரூபாய் அளவிற்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அடுத்த மூன்று ஆண்டுகளில், நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட் கடைகளின் எண்ணிக்கையை, ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அவற்றை, ‘பிரான்ச்சைஸ்’ முறையில் அறிமுகப்படுத்த உள்ளோம். நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட்டில், பால் மற்றும் ‘பேக்கரி’ பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். அடுத்து, மேலும் பல புதிய பொருட்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|