பதிவு செய்த நாள்
24 ஆக2016
00:07
சென்னை : ‘‘சென்னையில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், அதிகளவில் துவக்கப்பட்டு வருகின்றன,’’ என, காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் துணை தலைவர் லக் ஷ்மி நாராயணன் தெரிவித்தார்.
தொழில்முனைவோருக்கு பயிற்சியும், முதலீடு திரட்டுவதற்கான ஆலோசனையும், ‘டை சென்னை’ அமைப்பு வழங்கி வருகிறது. இந்த அமைப்பு, ‘சென்னை ஸ்டார்ட் அப் சூழலமைப்பு’ என்ற அறிக்கையை தயாரித்து உள்ளது.
கல்லுாரி மாணவர்களிடம்...அந்த அறிக்கையின் முதல் பிரதியை, சென்னையில், நேற்று, ராம்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் வெங்கட்ராம ராஜா வெளியிட, காக்னிசன்ட் டெக்னாலஜி துணை தலைவர் லக் ஷ்மி நாராயணன் பெற்று கொண்டார்.
இதில், லக் ஷ்மி நாராயணன் பேசியதாவது:தமிழகத்தில், அதிக தொழில் முனைவோர் உள்ளனர். இங்கு உள்ள இளைஞர்களிடம், சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற லட்சியம் உள்ளது. இந்தியாவில், மென்பொருள் துறையில், சென்னை முக்கிய மையமாக உள்ளது. சென்னையில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், அதிகளவில் துவக்கப்பட்டு வருகின்றன. கல்லுாரி மாணவர்களிடம், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் துவக்குவதை ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பாராட்டுக்குரியதுவெங்கட்ராம ராஜா கூறுகையில்,‘‘மிகப் பெரிய மாற்றத்தை முன்னெடுத்து செல்வதில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அடையாளம் கண்டு, நெறிப்படுத்தி, அவர்களை வளர்த்து ஆளாக்குகிற, ‘டை சென்னை’ அமைப்பின் முயற்சி பாராட்டுக்குரியது’’ என்றார். இந்த விழாவில், ‘டை சென்னை’ அமைப்பின் தலைவர் நாராயணன் உட்பட, பலர் பங்கேற்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|