பதிவு செய்த நாள்
25 ஆக2016
00:19
புதுடில்லி : ஸ்நாப்டீல் நிறுவனம், பண்டிகை சீசனை முன்னிட்டு, சந்தைப்படுத்தும் பணிக்காக, 200 கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளது.
இணையதள வணிகத்தில் ஈடுபட்டு வரும் அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்களிடம், கடும் போட்டி நிலவுகிறது. விரைவில், பண்டிகை காலம் துவங்குவதை முன்னிட்டு, அந்த நிறுவனங்கள், தங்களை சந்தைப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளன. ஸ்நாப்டீல், சந்தைப்படுத்தும் பணிக்காக, 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ய உள்ளது.
இதுகுறித்து, ஸ்நாப்டீல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனத்தின் இணையதளம் மூலம், பல வகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பண்டிகை காலம் துவங்க உள்ளதை அடுத்து, ‘டிவி’, பத்திரிகை, சமூக வலைதளங்கள் ஆகியவற்றின் மூலம், எங்கள் நிறுவனத்தை சந்தைப்படுத்த உள்ளோம். இதற்காக, 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|