பதிவு செய்த நாள்
25 ஆக2016
00:20
வதோதரா : மன்பசந்த் நிறுவனம், 160 கோடி ரூபாய் செலவில், பழச்சாறு தயாரிக்கும் ஆலையை அமைக்க உள்ளது.
மன்பசந்த் நிறுவனம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பழச்சாறு விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு, குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் இரண்டு; வாரணாசி மற்றும் டேராடூனில் தலா, ஒன்று என மொத்தம், நான்கு தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில், புதிதாக பழச்சாறு தயாரிக்கும் ஆலையை அமைக்க, மன்பசந்த் முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் தலைவர் திரேந்திரா சிங் கூறியதாவது:எங்கள் நிறுவனத்தின் பழச்சாறுகளுக்கு தேவை அதிகரித்து வருகிறது. இதனால், ஹரியானாவில் உள்ள அம்பாலா என்ற இடத்தில், 160 கோடி ரூபாய் செலவில், புதிய தொழிற்சாலை அமைக்க உள்ளோம். விரைவில் தென் மாநிலத்திலும் எங்கள் ஆலை அமைக்கப்பட இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|