பதிவு செய்த நாள்
25 ஆக2016
00:23
புதுடில்லி : ‘இந்திய ரியல் எஸ்டேட் துறையில், 200 கோடி டாலர் அளவிற்கு முதலீடு செய்ய, அன்னிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
அதன் விபரம்:இந்திய ரியல் எஸ்டேட் துறையில், நிலத்தில் முதலீடு செய்வது பிரதானமாக இருந்து வந்தது. இந்த நிலைப்பாடு, கடந்த 10 ஆண்டுகளில் மாறியுள்ளது. அதிக பாதிப்பில்லாத குடியிருப்பு, வணிக வளாக திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.இத்தகைய திட்டங்களில், கூட்டாக இணைந்து செயல்படுவதும், கூட்டு முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன.சமீபத்தில், ரியல் எஸ்டேட் திட்டங்களை மேம்படுத்துவதற்கான நிர்வாகத்திலும், கூட்டு நடவடிக்கை ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய, குறைந்த இடர்ப்பாடுகளைக் கொண்ட, முதலீட்டிற்கு அதிக பாதிப்பில்லாத, இந்திய ரியல் எஸ்டேட் துறை, சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கத் துவங்கியுள்ளது.
இதற்கு, 2014 – 15ம் நிதியாண்டு முதல், ரியல் எஸ்டேட் துறை கண்டு வரும் எழுச்சியும் துணை புரிந்துள்ளது. இதன் விளைவாக, இந்திய ரியல் எஸ்டேட் துறையில், 200 கோடி டாலர் முதலீடு செய்வதாக, அன்னிய நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. இதையடுத்து, பல நிறுவனங்கள், கூட்டாக புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. உதாரணமாக, கோத்ரெஜ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம், நெதர்லாந்தைச் சேர்ந்த, ஏ.பி.ஜி.ஏ.எம்., நிறுவனத்துடன் இணைந்து, 27.50 கோடி டாலர் முதலீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. டாடா ஹவுசிங் நிறுவனம், பிரிகேட் நிறுவனத்துடனும், டி.எல்.எப்., நிறுவனம், ஜி.ஐ.சி., நிறுவனத்துடனும் இணைந்து, செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்திய ரியல் எஸ்டேட் துறையில், 200 கோடி டாலர் முதலீடு செய்வதாக, அன்னிய நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. இதையடுத்து, பல நிறுவனங்கள், புதிய திட்டங்களில் தீவிரம் காட்டுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|