ரியல் எஸ்டேட் துறையில் 200 கோடி டாலர் அன்­னிய முத­லீடுரியல் எஸ்டேட் துறையில் 200 கோடி டாலர் அன்­னிய முத­லீடு ... ரூபாயின் மதிப்பு சிறிய அளவில் உயர்வு - ரூ.67.08 ரூபாயின் மதிப்பு சிறிய அளவில் உயர்வு - ரூ.67.08 ...
போலி மருந்துகள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசின் அதிரடி; கூடுதல் ஆய்வாளர்களை நியமிக்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2016
00:24

மும்பை : ‘‘நாட்டில் போலி மருந்­து­களின் புழக்­கத்தை கட்­டுப்­ப­டுத்த, கூடு­த­லாக மருந்து ஆய்­வா­ளர்­களை நிய­மிக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது,’’ என, மத்­திய மருந்­துகள் துறை இணை செயலர் சுதான்ஷ் பந்த் தெரி­வித்­துள்ளார்.
அவர், டில்­லியில் நடை­பெற்ற, இந்­திய – அமெ­ரிக்க வர்த்­தக கூட்­ட­மைப்பின் ஆண்டு பொதுக்­கூட்­டத்தில் மேலும் பேசி­ய­தா­வது: மத்­திய, மாநில அர­சு­களின் மருந்து தரக் கட்­டுப்­பாட்டு அமைப்­புகள், நாடு முழு­வதும் உள்ள, 10 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான மருந்து தயா­ரிப்பு தொழிற்­சா­லை­களின் கண்­கா­ணிப்பு பணியை மேற்­கொண்டு வரு­கின்­றன. மருந்­து­களின் தரம் குறித்து, தொழிற்­சா­லை­களில், ஆய்­வா­ளர்கள் சோதனை மேற்­கொள்­கின்­றனர். அது­போல, மருந்து கடை­களில் விற்­கப்­படும் மருந்­து­களின் தரம் குறித்தும், சோதனை நடத்­தப்­ப­டு­கி­றது. இதன் கார­ண­மாக, நாட்டில், போலி மருந்­து­களின் புழக்கம், 2 சத­வீ­தத்­திற்கும் குறை­வா­கவே உள்­ளது.
சமரசம் இல்லை :இருந்­த­போ­திலும், மருந்து துறையின் வளர்ச்­சிக்கு ஏற்ப, மருந்­து­களின் தரம் மற்றும் போலி மருந்­து­களின் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை விரி­வு­ப­டுத்த வேண்­டிய சூழல் உரு­வா­கி­யுள்­ளது. நாட்டில், 6 லட்­சத்­திற்கும் அதி­க­மான மருந்து கடைகள் உள்­ளன. ஆனால், அவற்­றுக்­கான ஆய்­வ­தி­கா­ரி­களின் எண்­ணிக்கை, 500 – 1,000 கடை­க­ளுக்கு ஒருவர் வீதம் என்ற அளவில் தான் உள்­ளது. ஆகவே, ஆய்வு அதி­கா­ரி­களின் எண்­ணிக்­கையை உயர்த்த அரசு திட்­ட­மிட்­டுள்­ளது. இதன் மூலம் தர­மற்ற மருந்­துகள் தயா­ரிப்பும், போலி மருந்­துகள் விற்­ப­னையும், கட்­டுக்குள் வரும்.
இந்­திய மருந்து தயா­ரிப்பு தொழிற்­சா­லை­களில், அமெ­ரிக்க மருந்து கட்­டுப்­பாட்டு அமைப்பும் ஆய்வு செய்து, மருந்­து­களின் தரத்தை பரி­சோ­திக்­கி­றது. இதற்கும், மத்­திய, மாநில அமைப்­பு­களின் மருந்து ஆய்­வு­க­ளுக்கும் தொடர்பு இல்லை. அமெ­ரிக்க மருந்து கட்­டுப்­பாட்டு கழகம், கடந்த நான்கு ஆண்­டு­களில், இந்­திய மருந்­து­களின் தரம் குறித்து, 26 எச்­ச­ரிக்கை அறிக்­கை­களை வெளி­யிட்­டுள்­ளது. அவை ஒரு பொருட்­டல்ல என்ற போதிலும், மருந்­து­களின் தரத்தில் எவ்­வித சம­ர­சத்­திற்கும், அனு­மதி கிடை­யாது என்­பதில், மத்­திய அரசு உறு­தி­யாக உள்­ளது. பிர­தமர் மோடி தலை­மை­யி­லான அரசு, இந்­திய மருந்து நிறு­வ­னங்கள் மீதான, அமெ­ரிக்க மருந்து கட்­டுப்­பாட்டு அமைப்பின் நட­வ­டிக்கை குறித்து, அந்­நாட்டின் சுகா­தார கட்­டுப்­பாட்டு அமைப்பின் கவ­னத்­திற்கு கொண்டு சென்­றுள்­ளது.
கட்டுப்பாடுகள் :மத்­திய அரசு, இந்­தி­யாவில் சுல­ப­மாக தொழில் துவங்­கு­வ­தற்கு வச­தி­யாக, பல்­வேறு கட்­டுப்­பா­டு­களை நீக்­கி­யுள்­ளது. இது, மருந்து துறையின் வேக­மான வளர்ச்­சிக்கு வழி கோலி­யுள்­ளது. கடந்த, 4 – 5 ஆண்­டு­களில், இந்­திய மருந்து துறையில், முத­லீ­டுகள் குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு அதி­க­ரித்­துள்­ளன. கடந்த நான்கு ஆண்­டு­களில் இந்­தியா, 460 கோடி டாலர் மதிப்­பிற்கு, மருந்­து­களை ஏற்­று­மதி செய்­துள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)