பதிவு செய்த நாள்
26 ஆக2016
00:04
கோல்கட்டா : ஸ்பென்சர்ஸ் ரீடெய்ல் நிறுவனம், ஆன்லைன் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பொருட்களை விற்பனை செய்ய உள்ளது.
பல்பொருள் அங்காடிகளை நடத்தி வரும் ஸ்பென்சர்ஸ் நிறுவனம், இணையதளம் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் திட்டத்தை அண்மையில் துவக்கியது. இதன் தொடர்ச்சியாக, நேரிடையாக மட்டுமின்றி இணையதளம், தொலைபேசி என எந்த முறையில், ‘ஆர்டர்’ செய்தாலும், பொருட்களை சப்ளை செய்வதற்கு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாட்டின் கிழக்கு பகுதிகளில், எங்கள் நிறுவனத்திற்கு அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதனால், டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கோல்கட்டாவில் இணையதள வணிகத்தை துவக்கினோம். தற்போது, பண்டிகை காலம் துவங்க இருப்பதால், விற்பனையை அதிகரிக்கும் வகையில் மேற்கண்ட நகரங்களில் வசிப்போர், இணையதளம், போன் உள்ளிட்ட எந்த முறையில் ஆர்டர் கொடுத்தாலும், மளிகை பொருட்கள் சப்ளை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|