பதிவு செய்த நாள்
26 ஆக2016
00:06
புதுடில்லி : மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை துறையில், அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதியில்லை. அவ்வாறு அனுமதி வழங்கினால், ஏராளமான சிகரெட் நிறுவனங்கள் தோன்றும். விவசாயிகளுக்கு, புகையிலை சாகுபடியில் ஆர்வம் அதிகரிக்கும். உலக வர்த்தக அமைப்பில், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் புகையிலை உற்பத்தியை படிபடியாக குறைப்பதாக இந்தியா உறுதி அளித்துள்ளது. அதை மீற முடியாது. புகையிலை துறையில், அன்னிய நேரடி முதலீடுகள் ஊக்குவிக்கப்பட மாட்டாது.தற்போது, இத்துறையில் தொழில்நுட்பம் சார்ந்த கூட்டு நடவடிக்கைகளில் மட்டுமே, அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது கூட, சிகரெட் சார்ந்த புகையிலை தயாரிப்புகளுக்கு கிடையாது. நாட்டின் புகையிலை உற்பத்தியில், 20 சதவீதமாக உள்ள, எப்.சி.வி., புகையிலை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|