பதிவு செய்த நாள்
26 ஆக2016
00:06
புதுடில்லி : நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமான – என்.பி.சி.ஐ., மொபைல் போனில், சுலபமாக பணப் பரிவர்த்தனை செய்ய உதவும், ‘யூனிபைடு பேமன்ட்ஸ் இன்டர்பேஸ் – யு.பி.ஐ.,’ என்ற மொபைல், ‘ஆப்’ஐ, கடந்த ஏப்ரலில், சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியது.
அதன் செயல்பாட்டில் திருப்தியடைந்த ரிசர்வ் வங்கி, நேற்று, பொதுமக்களுக்கு இவ்வசதியை வழங்க, 21 வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஐ.டி.பி.ஐ., வங்கி, ஆர்.பி.எல்., வங்கி, ஆந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, பாரதிய மகிளா வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட, 21 வங்கிகள், ‘யு.பி.ஐ.,’ வசதியை வழங்க உள்ளன.
இதுகுறித்து, என்.பி.சி.ஐ., நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஏ.பி.ஹோடா, ‘‘உடனடியாக பணம் அனுப்பவும், பெறவும் உதவும், இந்த மொபைல் ஆப், வங்கிகள் மூலம், அடுத்த, 2 – 3 நாட்களில், கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும்,’’ என, தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|