பதிவு செய்த நாள்
26 ஆக2016
00:07
விசாகப்பட்டினம் : ஆந்திர அரசு, வரும் அக்., மாதம் முதல், விசாகப்பட்டினத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையை துவக்க உள்ளது.
ஆந்திர அரசு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலாவை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக, விசாகப்பட்டினம் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஸ்கை சாப்பர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திற்கு இடையே நேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, விசாகப்பட்டினத்தில் உள்ள மூன்று இடங்களில், வரும் அக்., மாதம் முதல் ஹெலிகாப்டர் சுற்றுலா துவங்க உள்ளது.
இதுகுறித்து, ஆந்திர சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விசாகப்பட்டினம் நகர்ப்புற மேம்பாட்டு பூங்காவில் இருந்து கைலாசகிரி, பீமிலி, அரக்கு வேலி ஆகிய மூன்று இடங்களுக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை வழங்கப்படும். இதற்காக, ஒருவருக்கு, 2,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|