பதிவு செய்த நாள்
28 ஆக2016
01:46
மும்பை:மல்டிபிளக்ஸ் திரையரங்க வணிகத்தில் ஈடுபட்டிருக்கும், கார்னிவல் சினிமாஸ் நிறுவனம், விரிவாக்கநடவடிக்கைகளில் இறங்குகிறது.கார்னிவல் சினிமாஸ் நிறுவனம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில், 2018ம் ஆண்டு, மார்ச் மாதத்துக்குள், 700திரையரங்குகளை அமைக்க உள்ளது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் திரையரங்குகளை அமைப்பதன் மூலமாக, எங்கள் திரைகளின் எண்ணிக்கையை, 1,000 ஆக உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். இதற்காக ஏற்கனவே, 150 திரையரங்குகளோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். தற்போது, 324 அரங்குகள், 88 நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. புதிய அரங்குகளுக்காக, 850 முதல் 900 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய இருக்கிறோம்.ஏற்கனவே இருக்கும் திரையரங்குகளை கையகப்படுத்துவதைவிட, புதிய அரங்குகளை அமைப்பதையே தற்போது நாங்கள் விரும்புகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|