பதிவு செய்த நாள்
28 ஆக2016
01:47
புதுடில்லி:பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம், ‘பையர்ஸ்டோன்’ எனும் பெயரில், கார்களுக்கான புதிய டயரை அறிமுகம் செய்துள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரிட்ஜ்ஸ்டோன் கார்ப்பரேஷன், இந்தியாவில், 1996ல் டயர் விற்பனையில் களம் இறங்கியது. பின், 1998ம் ஆண்டு, ம.பி., மாநிலத்தில் உள்ள கேடா என்ற இடத்திலும்; 2013ம் ஆண்டு, புனேவிலும் தொழிற்சாலையை அமைத்தது.
இந்த நிலையில், பிரிட்ஜ்ஸ்டோன், அமெரிக்காவைச் சேர்ந்த, ‘பையர்ஸ்டோன்’ நிறுவனத்துடன் இணைந்து, ‘பையர்ஸ்டோன் எப்.ஆர்.500’ என்ற, கார் மற்றும் எஸ்.யு.வி., மாடல் கார்களுக்கான டயரை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து, பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உலக அளவில், மோட்டார் வாகன சந்தையில், இந்தியா சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. எங்கள் நிறுவனத்தின் புதிய வகை டயரை, இந்திய வாடிக்கையாளர்கள் விரும்புவர்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|