பதிவு செய்த நாள்
28 ஆக2016
01:48
புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த, சூப்பர்டெக் நிறுவனம், 300 கோடி ரூபாய் முதலீட்டில், மருத்துவ துறையில் இறங்க உள்ளது. சூப்பர்டெக் நிறுவனம், நொய்டா, குர்கான், காசியாபாத், மீரட், மொராதாபாத் உள்ளிட்ட நகரங்களில், ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த நிறுவனம், மருத்துவ துறையில் களம் இறங்க முடிவு செய்துள்ளது. இதற்காக, 300 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், மருத்துவ துறையில் ஈடுபட உள்ளது. முதல் கட்டமாக, நொய்டாவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 100 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்படும். அதை தொடர்ந்து, அடுத்த நான்கு ஆண்டுகளில், கூடுதலாக, மூன்று மருத்துவமனைகள் அமைக்க உள்ளது. இதற்காக, 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|