பதிவு செய்த நாள்
28 ஆக2016
01:49
ஐதராபாத்:தெலுங்கானாவில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின், சர்வதேச மாநாடு நடக்க உள்ளது. மத்திய, மாநில அரசுகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால், அதிகளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கப்படுகின்றன. இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள, ஐதராபாத்தில், அம்மாநில அரசும், தொழில் நிறுவனங்களும் இணைந்து, சர்வதேச ஸ்டார்ட் அப் மாநாடு ஒன்றை நடத்த உள்ளன. செப்., 3, 4ம் தேதிகளில் நடக்கும் இந்த மாநாட்டில், 12 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு, ஸ்டார்ட் அப் தொழில் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து, மாநாட்டு ஏற்பட்டாளர் ஒருவர் கூறியதாவது:சர்வதேச ஸ்டார்ட் அப் மாநாட்டில், 12 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். அதில், 107 பேர், ஸ்டார்ட் அப் குறித்து, பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனர். மாநாட்டில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை சாராதவர்களும், பொதுமக்களும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|