பதிவு செய்த நாள்
28 ஆக2016
01:51
புதுடில்லி:இந்தியாவில் விதைகள் உற்பத்தியில் ஈடுபட்டு உள்ள உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த, 10நிறுவனங்கள் ஒன்றிணைந்து, இந்திய விதை தொழில் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இதில், மான்சான்டோ இந்தியா, பேயர் கார்ப் சயன்ஸ், டுபான்ட் பயனீர், சின்ஜென்டா உள்ளிட்டநிறுவனங்கள், உறுப்பினர்களாக சேர்ந்துள்ளன. இந்த கூட்டமைப்பின் தலைவர் எம்.ராமசாமி கூறியதாவது:ஒரு பொருளின் விலையை சந்தைதான் தீர்மானிக்க வேண்டும். ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளால், விலை நிர்ணயம் செய்யப்படுவதை விட, சந்தை போக்கிற்கு ஏற்ப விலை தீர்மானிக்கப்படுவதை, எங்கள் அமைப்பு ஆதரிக்கும். இந்தியாவில், விதை துறையின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும். இவ்வாறு அவர் கூறினார். ‘பி.டி. பருத்தி’ தொடர்பாக, மான்சான்டோவுக்குஎதிராக அரசு எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து, இந்திய விதை தொழில் கூட்டமைப்பு உருவாகியுள்ளது. இந்த அமைப்பு, தன் ஆதரவை, மான்சான்டோவுக்கு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|